தீயன் ஆயினேன் ஐயா


தீயன் ஆயினேன்

158. (176) முகாரி                                                    ஆதி தாளம்

பல்லவி

                        தீயன் ஆயினேன், ஐயா; எளியேன் உற்ற
                        தீவினை அனைத்தும் தீரும்;
                        தேவரீர் மேலே என் பாரம்,
                        தீயன் ஆயினேன், ஐயா.

அனுபல்லவி

            மாயவலை வீசுவலு பேயின் வினை தீர,
            நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
            நிச்சயித்தெழுந்த எங்கள்
            அச்சயா[1] திருக்குமாரா. - தீயன்

சரணங்கள்

1.         நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என்
            தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே;
            என்ன என்தன் நீதி கந்தை
            அன்ன அருவருப்பாமே;
            எத்தனை ஆனாலும் உன்தன்
            சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய். - தீயன்

2.         பாவம் மீறி என் ஆவி தள்ளாடி நற்
            சீவ பாதையைத் தாவி ஓடியே,
            ஆவலாய் அழி வுறும் துர்ச்
            சாவின் வழியே தொடர்ந்து
            அக்கிரமச் செய்கைகளில்
            சிக்கினேன்; ஐயோ, உன் தஞ்சம்! - தீயன்

3.         தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
            வாதியாய் உறு நீதம் உண்டென,
            போதம் உற வேத நெறி
            ஓதிய ஏசு நாதா, உன்
            புண்ணியத்தால் என்னை உய்யப்
            பண்ணிடக் கிருபை செய்வாய். - தீயன்

- யோ. பால்மர்


[1] கடவுளே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு