நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது


நித்திய கன்மலை எனக்காய் பிளந்தது

195. (256) முகாரி                                சாபுதாளம்

பல்லவி

          நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது
          நேயமாய் மறைந்துய்குவேன்

சரணங்கள்

1.         சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,
                        தூயன் விலாவினின்று;-அதால்
            சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
                        சுகமாக வாழ்வேனே. - நித்திய

2.         என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
                        ஈடு நான் செய்வதில்லை;-தினம்
            சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,
                        தீங்கு செய்வதில்லை - நித்திய

3.         கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்
                        குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதி
            கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,
                        கோவே; அல்லாது துய்ந்திடேன் - நித்திய

4.         ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,
                        தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளி
            மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்
                        விரைந்துனில் மறைந்துய்குவேன் - நித்திய

- த. பலவேந்திரம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு