ஐயையா நான் பாவி என்னை


என்னை ஆளும் தயாபரனே

166. (185) முகாரி                                சாபுதாளம்

பல்லவி
            ஐயையா, நான் பாவி,-என்னை
            ஆளும் தயாபரனே!

சரணங்கள்

1.         பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
                        போனவழி நடந்தேன்;-ஏ
            சையா, அபயம்! அபயம்! இரங்கும், மே
                        சையா, என் தாதாவே. - ஐயையா

2.         எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்;
                        எத்தனை தீதுகளோ?-என-து
            அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
                        தாண்டருளும், கோவே. - ஐயையா

3.         வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
                        மாலமோ, ரண்டகமோ?-மனச்
            சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
                        சமஸ்த நன்மைக் கடலே. - ஐயையா

4.         பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
                        பொறாமையும், ஆணவமும்-விட்
            டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
                        ஏகதிரித்துவனே. - ஐயையா

5.         உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
                        துனதடியார்களையும்,-நான்
            என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
                        ஏவும் பராபரனே - ஐயையா

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு