அந்த நாள் பாக்கிய நாள்


அந்த நாள் பாக்கிய நாள்

140. வசந்தபைரவி                                         திரிபுடதாளம்

பல்லவி

                        அந்த நாள் பாக்கிய நாள்-நான் மீட்கப்பட்ட
                        அந்த நாள் பாக்கிய நாள்.

அனுபல்லவி

            அந்த நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரென்னை
            அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் - அந்த

சரணங்கள்

1.         அன்றே எனக்குப் பேதித்தார்,-அவர் வழியில்
            அநுதினம் செல்லக் கற்பித்தார்;
            என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
            ஏவினார் என் இரட்சகர், எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே. - அந்த

2.         என்றனை அன்றே இழுத்தார்-தமதன்பினால்
            இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
            சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
            இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன். - அந்த

3.         ஆறுதல்களால் நிறைந்தேன்,-அளவில்லாத
            ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
            தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
            மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன். - அந்த

4.         அந்நாளில் வாக்குப் பண்ணினேன்,-உறுதியாக
            எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
            சொன்ன இவ்வாக்கை நிதம், சுத்தமாய் நிறைவேற்ற
            உன்னத பலம் தாராய், என்னையாட்கொண்ட தேவா. - அந்த

- வே. சந்தியாகு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு