குணப்படு பாவி தேவ


குணப்படு பாவி

148. (169) உசேனி                                         ரூபக தாளம்

பல்லவி

                        குணப்படு, பாவி; தேவ
                        கோபம் வரும் மேவி-இப்போ.

அனுபல்லவி

            கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்;
            காலமிருக்கையில் சீலமதாக நீ. - குணப்படு

சரணங்கள்

1.         கர்த்தனை நீ மறந்தாய்,-அவர்
            கற்பனையைத் துறந்தாய்,
            பக்தியின்மை தெரிந்தாய்,-பொல்லாப்
            பாவ வழி திரிந்தாய்,
            புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா,
            உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார். - குணப்படு

2.         துக்கமடையாயோ?-பாவி
            துயரமாகாயோ?
            மிக்கப் புலம்பாயோ?-மனம்
            மெலிந்துருகாயோ?
            இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
            தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? - குணப்படு

3.         தாவீ தரசனைப்போல்,-தன்னைத்
            தாழ்த்தும் மனாசேயைப்போல்,
            பாவி மனுஷியைப்போல்,-மனம்
            பதைத்த பேதுருபோல்,
            தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
            கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி. - குணப்படு

4.         உன்னை நீ நம்பாதே!-இவ்
            வுலகையும் நம்பாதே;
            பொன்னை நீ நம்பாதே;-எப்
            பொருளையும் நம்பாதே;
            தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
            நின்னையும் ரட்சிப்பார், அனைவரைப்பற்று - குணப்படு

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு