மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை


மலையாதே நெஞ்சமே

136. (44) காம்போதி                             ஆதி தாளம்

பல்லவி

                   மலையாதே, நெஞ்சமே,-இப்படி நம்மை
                   வகுத்தவனே தஞ்சமே.

அனுபல்லவி

            அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர
            அருத்தப் பண் கருத்தர்க்கென்
            றுரித்தல் கொண் டிருத்திக்கொள். - மலை

சரணங்கள்

1.         கருத்தர் கட்டுவதல்லோ வீடு,-நரர்
            கட்டும் கிரியைகள் வீண் பாடு,
            வருத்தப்படுவதென்ன கேடு?-பேயின்
            மயக்கமெல்லாம் விட்டுப்போடு;
            தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச்
            சலியாதிரு, நலியாதிரு
            தந்தையார் சுதன் வந்த நாள் இது. - மலை

2.         எண்ணத்தினால் என்னகூடும்?-தெய்வம்
            இட்டதல்லோ வந்து நீடும்;
            மண்ணைச் சதம் என்றெண்ணி, வாடும்-மக்கள்
            மனதில் துயரம் வந்து மூடும்;
            கண்ணைத் திறந்து நோக்கு, விண்ணைச் சிறந்துள்ளார்க்குக்
            குருத்தாய் இரு; உரித்தாய் இரு;
            குருத்தரானவர் ஒருத்தரே துணை. - மலை

3.         என்ன கவலைப்பட்டும் நஷ்டமே,-கிறிஸ்
            தேசு பிறந்ததுன் அதிஷ்டமே;
            உன்னதன் பண்ணின திட்டமே,-உனக்
            கொழுங்கு ப்ரமாணத்தின் சட்டமே;
            பின்னப்பட் டுலையாதே, சின்னப்பட் டலையாதே;
            பெருத்த நாள் இது, கருத்தர்நாள் இது,
            பெலப்பாய் இரு, கெலிப்பாய் இரு. - மலை

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு