மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை
மலையாதே நெஞ்சமே
136. (44) காம்போதி ஆதி
தாளம்
பல்லவி
மலையாதே, நெஞ்சமே,-இப்படி
நம்மை
வகுத்தவனே
தஞ்சமே.
அனுபல்லவி
அலையாதருள்
மந்த்ர கலையாகம சுந்த்ர
அருத்தப்
பண் கருத்தர்க்கென்
றுரித்தல்
கொண் டிருத்திக்கொள்.
- மலை
சரணங்கள்
1. கருத்தர்
கட்டுவதல்லோ
வீடு,-நரர்
கட்டும்
கிரியைகள் வீண்
பாடு,
வருத்தப்படுவதென்ன
கேடு?-பேயின்
மயக்கமெல்லாம்
விட்டுப்போடு;
தரித்திரத்
திரள் இக்கட்டு
பெருத்த கவலைப்பட்டுச்
சலியாதிரு,
நலியாதிரு
தந்தையார்
சுதன் வந்த நாள்
இது. - மலை
2. எண்ணத்தினால்
என்னகூடும்?-தெய்வம்
இட்டதல்லோ
வந்து நீடும்;
மண்ணைச்
சதம் என்றெண்ணி,
வாடும்-மக்கள்
மனதில்
துயரம் வந்து மூடும்;
கண்ணைத்
திறந்து நோக்கு,
விண்ணைச்
சிறந்துள்ளார்க்குக்
குருத்தாய்
இரு; உரித்தாய்
இரு;
குருத்தரானவர்
ஒருத்தரே
துணை. - மலை
3. என்ன கவலைப்பட்டும்
நஷ்டமே,-கிறிஸ்
தேசு
பிறந்ததுன்
அதிஷ்டமே;
உன்னதன்
பண்ணின திட்டமே,-உனக்
கொழுங்கு
ப்ரமாணத்தின்
சட்டமே;
பின்னப்பட்
டுலையாதே,
சின்னப்பட்
டலையாதே;
பெருத்த
நாள் இது, கருத்தர்நாள்
இது,
பெலப்பாய்
இரு, கெலிப்பாய்
இரு. - மலை
- வே.
சாஸ்திரியார்
YouTube Link
Comments
Post a Comment