நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி


நீ உனக்குச் சொந்தமல்லவே

152. (201) கமாஸ்                                          ரூபகதாளம்

பல்லவி

            நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
            நீயுனக்குச் சொந்தமல்லவே.

அனுபல்லவி

            நீயுனக்குச் சொந்தமல்லவே,
            நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். - நீ

சரணங்கள்

1.         சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
            திரு விலாவில் வடியுது, பாரே;
            வலிய பரிசத்தால் கொண்டாரே;
            வான மகிமை யுனக்கீவாரே. - நீ

2.         இந்த நன்றியை மறந்துபோனாயோ? யேசுவைவிட்டு
            எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
            சந்ததமுனதிதயங் காயமும்,
            சாமி கிறிஸ்தினுடையதல்லவோ? - நீ

3.         பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
            பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
            அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
            அக்கினிக் கடல் தள்ளுவானேன்? - நீ

4.         பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
            பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
            உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
            உயர் பதவியில் என்றும் நிலைப்பாய். - நீ

- தேவசகாயம் உபாத்தியாயர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு