தாகம் மிகுந்தவரே அமர்ந்த


தாகம் மிகுந்தவரே

139. (161) முகாரி                                          சாபு தாளம்

பல்லவி

                        தாகம் மிகுந்தவரே, அமர்ந்த
                        தண்ணீரண்டை வாரும்.-ஓ!

1.         ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன்
                        இன்பவாக்குத்தத்தமே,-நம்பி
            வேகமாக ஓடி வாருமெனதிடம்,
                        வேண்டியதைத் தருவேன். - ஓ!

2.         காசுபணமது, அற்றுலகந்தன்னில்
                        கஷ்டப்படுவோரே,-விசு
            வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி
                        வாங்கியே சாப்பிடுமே. - ஓ!

3.         பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள்
                        பட்டு உழல்வோரே,-வாரும்,
            நேரே, உமக்கிளைப்பாறுதலாவியை
                        நேசமாய்த் தந்திடுவேன். - ஓ!

4.         அப்பமல்லாத பொருளையும் திருப்தி
                        ஆகாத வஸ்துவையும்,-நம்பித்
            தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம்
                        தன்னையுமேன் கெடுப்பீர்? - ஓ!

5.         கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில்
                        கண்டிடுமே உடனே;-உந்தன்
            அத்தன் சமீபமாக இருக்கும் போதே
                        ஆவலாய்க் கூப்பிடுமே. - ஓ!

-வே. மாசிலாமணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு