ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே


ஆரிடத்தினில் ஏகுவோம்?

189. (200) சாவேரி                                                  சாபு தாளம்

பல்லவி

          ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,
          ஆரிடத்தில் ஏகுவோம்?

அனுபல்லவி

            ஆரிடத்தில் ஏகுவோம்?  சோராநித்திய ஜீவ
            நேரார்[1] வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. - ஆரி

சரணங்கள்

1.         பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
            தாவரமில்லை; நீரே
            ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
            மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். - ஆரி

2.         போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
            போவதில்லை, பரமனே,
            ஞானோபதேச குருவான உம்மை அண்டின
            ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. - ஆரி

3.         உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
            உள்ள பொருளனைத்தையும்
            முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
            தெற்றாய்,[2] இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. - ஆரி

4.         பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
            புண்ய நாதன் நீரல்லவோ?
            பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
            நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு. - ஆரி

- யோ. பால்மர்


[1] நன்னெறி
[2] நிச்சயமாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு