என் ஐயா தினம் உனை நம்பி நான்


என் கலி நீங்கும்படி நல்பாங்கு பரியாயோ?

178. (220) முகாரி                                          ஆதி தாளம்

பல்லவி

            என் ஐயா, தினம் உனை நம்பி நான்
            இருப்ப தறியாயோ?-மன
            தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
            பாங்கு புரியாயோ?

அனுபல்லவி

            அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
            வகுத்தவா, கிறிஸ்தையா எனதையா,
            அருள் செய்யாதது மெய்யா இது? - என்

சரணங்கள்

1.         குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
            கூசி நாணுதே;-என்தன்
            கோதும்[1] நான் செய்த தீதும் மனதில்
            கூடத் தோணுதே;
            சுற்றும் உலகச் சத்துருப் பகை
            சூழக் காணுதே;
            சுருதி மொழி உறுதி தனைக்
            கருதி வந்தேன்; பொறுதி அருள்! - என்

2.         உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
            குதவி இல்லையே;-என
            துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும்
            உரிமை இல்லையே;
            பின் எவரிடம் போவேன், சொல்? அது
            பெரிய தொல்லையே;
            பேசும் விசு வாசம் வளர்
            நேசக் கதிர் வீச அருள்! - என்

3.         அத்தனே, உன்றன் ரத்தத்தால் எனை
            ஆற்றித் தேற்றையா,-தேவ
            ஆவியாகிய ஈவெனும் உன
            தருளை ஊற்றையா,
            நித்தனே, என்றன் குற்றத்தை எல்லாம்
            நீக்கி ஆற்றையா,
            நேசா, பவ நாசா, மறை
            வாசா, ஏசு, ராசா அருள்! - என்

- மரியான் உபதேசியார்


[1] குற்றமும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு