ஆசையாகினேன் கோவே உனக்


ஆசையாகினேன் கோவே

193. (208) யமுணாகல்யாணி                        ரூபகதாளம்

பல்லவி

            ஆசையாகினேன், கோவே-உனக்
            கனந்த ஸ்தோத்திரம், தேவே!

அனுபல்லவி

            யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா![1] -ஆசை

சரணங்கள்

1.         வேதா, ஞானப் பர்த்தா,[2]-என்-தாதா, நீயே கர்த்தா;
            மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. - ஆசை

2.         கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,
            நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. - ஆசை

3.         வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்
            காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. - ஆசை

4.         வந்தனம், வந்தனம், யோவா!-நீ-சந்ததம் சந்ததம் கா, வா,
            விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, யேசு நாதா! - ஆசை

- வே. சாஸ்திரியார்


[1] தாங்குவோனே
[2] கணவன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு