ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ


பாவத்தினை விட்டோடாயோ?

149. (171) ஹரிகாம்போதி                                        ஆதி தாளம்

பல்லவி

            ஓகோ! பாவத்தினைவிட் டோடாயோ?
            உள்ளமே, யேசு அன்பை நாடாயோ?

சரணங்கள்

1.         மா கிருபையாக, ஏகன் அன்பாக
            வந்ததிலையோ பூவில் உனக்காக? - ஓகோ!

2.         நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
            நாதன் உன் பொருட்டிருந்தார், கேளாய்? - ஓகோ!

3.         யூதர்கள் வைய, வேதனை செய்ய,
            உன் பவம் செய்த தவர் உளம் நைய. - ஓகோ!

4.         சிலுவையில் இறுக்க, உலகரும் நொறுக்கச்
            செய்த துன் பவம் மேசியா இறக்க. - ஓகோ!

5.         அலகை[1] உன் மீது பல வகைத் தீது
            ஆவலுடன் செய்வதால் புவி மீது. - ஓகோ!

6.         ஐயோ! என் மனமே, வையகம் வனமே;
            அழியா உலகில் அன்புற் றனுதினமே. - ஓகோ!

- யோ. பால்மர்


[1] பிசாசு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு