ஐயையா நான் வந்தேன் தேவ


ஐயையா, நான் வந்தேன்

185. (202) முகாரி                                          சாபு தாளம்

பல்லவி

                   ஐயையா, நான் வந்தேன்;-தேவ
                   ஆட்டுக்குட்டி, வந்தேன்.

சரணங்கள்

1.         துய்யன் நீர் சோரி[1] பாவி எனக்காய்ச் சிந்தித்
                        துஷ்டன் எனை அழைத்தீர்,-தயை
            செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
                        தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஐயையா

2.         உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
                        ஒழிந்தால் வருவேன், என்று-நில்லேன்;
            தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
                        தேவாட்டுக்குட்டி, வந்தேன்.  - ஐயையா

3.         எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
                        எத்தனை, எத்தனையோ! - இவை
            திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்;
                        தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஐயையா

4.         ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
                        தென்னை அரவணையும்;-மனம்
            தேற்றிக்கொண்டேன் உந்தம் வாக்குத்தத்தங்களால்;
                        தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஐயையா

5.         மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
                        மாறி அகன்றதுவே,-இனி
            திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
                        தேவாட்டுக்குட்டி, வந்தேன் - ஐயையா

- ஆ. வேதக்கண்


[1] இரத்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு