அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா


ஏசுநாதா உன் அடைக்கலமே

197. சங்கராபரணம்                                         ஆதி தாளம்

பல்லவி

          அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்
          அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

            திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. - அடை

சரணங்கள்

1.         ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
            அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
            மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
            தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! - அடை

2.         கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
            மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
            கெட்டவனே போவெனக் கிளத்தினும்[1] நியாயமே,
            கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! - அடை

3.         சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
            நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;
            பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
            எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! - அடை

4.         என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
            என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ?
            அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
            இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? - அடை

- தேவசகாயம் உபாத்தியாயர்


[1] கூறினும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு