வா பாவீ மலைத்து நில்லாதே வா


வா, பாவி

145. (162) ஹரிகாம்போதி                                        ஏக தாளம்

பல்லவி

                   வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா.

சரணங்கள்

1.         என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
            றெண்ணித் திகையாதே;
            உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
            உள்ளபடி வாவேன். - வா

2.         உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
            உன் பாவத்தைச் சுமந்தேன்;
            சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
            தீர்த்து விட்டேன், பாவி, வா. - வா

3.         கொடிய பாவத்தழலில் விழுந்து
            குன்றிப் போனாயோ?
            ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
            ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. - வா

4.         விலக யாதொரு கதியில்லாதவன்
            உலகை நம்பலாமோ?
            சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
            சீக்கிரம் ஓடி வாவேன். - வா

5.         என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
            இகழ்ந்து தள்ளேனே;
            மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
            வாராயோ, பாவி? - வா

- தேவசகாயம் உபாத்தியாயர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு