தேவா இரக்கம் இல்லையோ இயேசு


தேவா, இரக்கம் இல்லையோ?

176. (218) செஞ்சுருட்டி                                         ஆதி தாளம்

பல்லவி

            தேவா, இரக்கம் இல்லையோ?-இயேசு
            தேவா, இரக்கம் இல்லையோ?

அனுபல்லவி

            ஜீவா, பரப்ரம[1] ஏ கோவா, திரித்துவத்தின்
            மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன், ஒரே - தேவா

சரணங்கள்

1.         எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்
            இல்லாமை நீக்கும் அருளே,-கொடும்
            பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
            கொல்லா தருள் புரியும் நல்லாயன் யேசு நாதா! - தேவா

2.         எங்கும் நிறைந்த ஜோதியே,-ஏழைப்
            பங்கில் உறைந்த நீதியே,-எங்கள்
            சங்கடமான பாவ சங்கதங்களை[2] நீக்கும்
            துங்க இஸ்ரவேலின் வங்கிஷ க்ரீடாபதி! - தேவா

3.         வேதாந்த வேத முடிவே,-ஜெக
            ஆதாரம் ஆன வடிவே,-ஐயா,
            தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே; யேசு
            நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை. - தேவா

- வே. சாஸ்திரியார்




[1] பரம்பொருள்
[2] நட்புகளை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு