திருமுகத் தொளிவற்று பெருவினைகளில்


சீர்கெட்ட பாவி ஆனேன்

164. (183) காம்போதி                                              சாபு தாளம்

பல்லவி

1.         திருமுகத் தொளிவற்று; பெருவினைகளில் உற்றுச்
            சீர்கெட்ட பாவி ஆனேன்;-நான்
            ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட,
            ஊக்கம் அருள், பரனே.

2.         துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல்
            சோபிதம் நான் இழந்தேன்;-பேய்ப்
            பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப்
            பாவிக் கிரங் கையனே.

3.         பாதகர் மீதில் பரிதபியாமலும்,
            பாவம் பெறாமலும் நீ-சுத்த
            நீதியை நோக்கில், உனது சமூகத்தில்
            நிற்பவர் ஆர், துய்யனே?

4.         தன் புண்ணி யத்தால் எவனும் மன்னிப்புறத்
            தக்கவன் இல்லை மெய்யாய்;-எந்தை!
            உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய்
            உண்டு பொறுப் பெனக்கே.

5.         மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என்
            வஞ்சக நெஞ்சதனை-நேராய்
            விண்ணையே நோக்கிடப் பண், இறைவா; உனை
            வேண்டி மன்றாடுகின்றேன்.

6.         மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ
            மன்னிப்பருள் வதன்றி,-எனக்
            காறுதலாக உனது நல் ஆவியை
            அனுக்கிரகித்தாள், பரனே.

- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு