ஆண்டவா மோட்சகதி நாயனே


பாவிக் கிரங்கையனே

155. (83) சங்கராபரணம்                                           ஆதி தாளம்

பல்லவி

            ஆண்டவா, மோட்சகதி நாயனே,
            மீண்டவா, பாவிக் கிரங்கையனே.

சரணங்கள்

1.         நீண்ட ஆயுளுள்ளவா, நெறிமறை கொடுத்தவா,
            தாண்டி உலகில் வந்தாயே, தயாளமுள்ள யேசுவே - ஆண்டவா

2.         பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே;
            சித்தம் வைத்திரங்கமாட்டாயோ, தேவசீல மைந்தனே? - ஆண்டவா

3.         பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட
            ஜீவவாக்குரைக்கவில்லையோ, தேற்றல் செய்யும் மீட்பரே? - ஆண்டவா

4.         பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே;
            ஆதரவுநீ தான் அல்லவோ, அருமையுள்ள அப்பனே? - ஆண்டவா

5.         கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே,
            பொல்லாருக்கிரங்கவில்லையோ, பொறுமையுள்ள தேவனே? - ஆண்டவா

6.         பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே;
            கோபமின்றி என்னை நோக்காயோ, குருசில் அறையுண்டவா? - ஆண்டவா

- யோ. அருளப்பன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு