மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ


உன் நெஞ்செனக்குத் தாராயோ?

150. (172) ஹரிகாம்போதி                                    ஆதி தாளம்

பல்லவி

          மகனே, உன் நெஞ்செனக்குத் தாராயோ?-மோட்ச
          வாழ்வைத் தருவேன், இது பாராயோ?

சரணங்கள்

1.         அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே,-பாவ
            அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே, - மகனே

2.         உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே-அதை
            உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே. - மகனே

3.         பாவம் அனைத்துமே விட்டோடாயோ?-நித்ய
            பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? - மகனே

4.         உலக வாழ்வினை விட்டகல்வாயே,-மகா
            உவப்பாய்க் கதி ஈவேன்; மகிழ்வாயே. - மகனே

5.         உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே,-அதில்
            ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே. - மகனே
­

- ச. யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு