எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்


எங்கேயாகினும் ஸ்வாமி

142. தோடி                                                      ரூபக தாளம்

பல்லவி

            எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,
            அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

சரணங்கள்

1.         பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,
            பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். - எங்கே

2.         வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,
            போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. - எங்கே

3.         பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,
            பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். - எங்கே

4.         எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்
            எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். - எங்கே

5.         உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;
            மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. - எங்கே

6.         தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,
            சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். - எங்கே

7.         ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!
            ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். - எங்கே

­- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு