தேவனே நான் உமதண்டையில்


தேவனே நான் உமதண்டையில் சேர்வதே

198. ஆனந்தபைரவி                                       ஏகதாளம்

பல்லவி

          தேவனே, நான் உமதண்டையில்-இன்னும் நெருங்கிச்
          சேர்வதே என் ஆவல் பூமியில்.

அனுபல்லவி

            மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
            கோவே,[1] தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன். -தேவனே

சரணங்கள்

1.         யாக்கோபைப்போல், போகும் பாதையில்-பொழுது பட்டு
            இராவில் இருள் வந்து மூடிட,
            தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
            நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே

2.         பரத்துக்கேறும் படிகள் போலவே-என் பாதை தோன்றப்
            பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
            கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
            அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே

3.         நித்திரையினின்று விழித்துக்-காலை எழுந்து
            கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
            இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர்க் கல் நாட்டுவேனே,
            என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன். - தேவனே

4.         ஆனந்தமாம் செட்டை விரித்துப்-பரவசமாய்
            ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
            வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்,
            மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன். - தேவனே

- வே. சந்தியாகு


[1] அரசனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு