இரங்கும் இரங்கும் கருணைவாரி


இரங்கும் இரங்கும் கருணைவாரி

167. (186) மணிரங்கு                                          ஏகதாளம்

பல்லவி

                    இரங்கும் இரங்கும், கருணைவாரி,
                    ஏசு ராசனே,-பவ-நாசநேசனே!

சரணங்கள்

1.         திரங்கொண்டாவி வரங்கொண்டுய்யச்
            சிறுமை பார், ஐயா;-ஏழை-வறுமை தீர், ஐயா. - இரங்கும்

2.         அடியன் பாவக் கடி விஷத்தால்
            அயர்ந்து போகின்றேன்;-மிகப்-பயந்து சாகின்றேன். - இரங்கும்

3.         தீமை அன்றி வாய்மை செய்யத்
            தெரிகிலேன், ஐயா,-தெரிவைப்[1]-புரிகிலேன், ஐயா. - இரங்கும்

4.         பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
            பரிந்து கேள், ஐயா;-தயை-புரிந்து மீள், ஐயா. - இரங்கும்

- அ. வேதக்கண்


[1] தெரிந்தவை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு