கிருபை புரிந்தெனை ஆள்


கிருபை புரிந்தெனை ஆள்

183. (120 L.) சதுருலகாம்போதி                       ஆதி தாளம்

பல்லவி

                        கிருபை புரிந்தெனை ஆள்;-நீ பரனே!
                        கிருபை புரிந்தெனை ஆள்;-நிதம்

சரணங்கள்

1.         திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
            வரில்நரனாகிய மா துவின் வித்து! - கிருபை

2.         பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
            நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து, - கிருபை

3.         தந்திரவான் கடியின் சிறைமீட்டு,
            எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு. - கிருபை

4.         தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
            சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி. - கிருபை

5.         தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து,
            நல் வினையே செய் திராணி அளித்து. - கிருபை

6.         அம்பரமீதுறை வானவர் போற்ற
            கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த. - கிருபை

- மதுரநாயகம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு