உன்றன் சுயமதியே நெறி என்று


சுயமதியே நெறியென்று சாயாதே

141. (362) பியாகு                                                    ரூபக தாளம்

பல்லவி

                   உன்றன் சுயமதியே நெறி என்-று
                   உகந்து சாயாதே;-அதில் நீ
                   மகிழ்ந்து மாயாதே.

சரணங்கள்

1.         மைந்தனே, தேவ மறைப்படி யானும்
            வழுத்தும்மதித னைக் கேளாய்;-தீங்
            கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய். - உன்றன்

2.         சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,
            வந்து விளையுமே கேடு;-அதின்
            தந்திரப் போக்கை விட்டோடு; கதி தேடு. - உன்றன்

3.         துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
            திட்ட மதாய் நடவாதே;-தீயர்
            கெட்ட வழியில் நில்லாதே; அது தீதே. - உன்றன்

4.         சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
            மிக்க இருக்க நண்ணாதே;-அவர்
            ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே. - உன்றன்

5.         நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
            மானிப்பது வெகு பாவம்;-அதின்
            மேல் நிற்குமே தேவ கோபம்; மனஸ்தாபம். - உன்றன்

- யோ. பால்மர்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு