இயேசு நாதனே இரங்கும் என்


யேசுநாதனே, இரங்கும்

159. (64 L) உசேனி                                                 ரூபகதாளம்

பல்லவி

                   யேசுநாதனே!-இரங்கும் என்-யேசு நாதனே!

அனுபல்லவி
            ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே!
            அருளே! தெருளே! பொருளே!
            ஆவல் ஆகினேன், மகா பிரலாபம் மூழ்கினேன்;
            ஆயா! ஆயா! தூயா! ரட்சியும்;
            ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். - யேசு

சரணங்கள்

1.         அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா!
            ஆத்துமநாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர் மெய்யா!
            தருணம், தருணம், கைவிடாதேயும்;
            தலைவா! நலவா! வலவா!
            தாமதியாதே-கிருபைசெய்யும்-சாமி இப்போதே
            தாதா! நாதா! நீதா! நீகா!
            தருமப்பிர காசனே! பரம சருவேசனே! - யேசு

2.         ஐந்துகாயத்தின் கிருபைக்கோட்டையில் அடைக்கலந் தாவே
            ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
            விந்தைக்கிருபை அளிக்கவேண்டும்;
            விமலா! நிமலா! அமலா!
            வேறுபண்ணாதே-மிகும்சீறு-மாறுநண்ணாதே,
            மேலா! கோலா! நூலா! நீயே
            விரும்பிச்சேரும், கோவே! திரும்பிப்பாரும், தேவே! - யேசு

3.         உன்னைப்போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமானே!
            உத்தமமேய்ப்பனே! சத்தியமீட்பனே! உண்மைக் கோமானே!
            என்னை ரட்சிப்ப துன்கடன் அல்லவோ?
            இறையே! நிறையே! பொறையே!
            ஏதம் இல்லானே!-அடியாரைத்-தீது சொல்லானே!
            ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்;
            இரக்கமே உன்தஞ்சம்; நெருக்கமே பிரபஞ்சம். - யேசு

- வே. சாஸ்திரியார்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு