பாதம் ஒன்றே வேண்டும்


உன் பாதம் ஒன்றே வேண்டும்

201. (261) உசேனி                               ரூபக தாளம்

பல்லவி
               பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்
               பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

சரணங்கள்
 1.         நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்
            காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம்

2.         சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
            பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் - பாதம்

3.         வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
            ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் - பாதம்

4.         போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
            நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் - பாதம்

5.         நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேற வல்
            ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன் - பாதம்

6.         பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
            சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன் - பாதம்

- சு.ச. ஏரேமியா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு