கவலை வைக்காதே மகனே நீ


கவலை வைக்காதே

213. (146 L.) உசேனி                          ரூபக தாளம்

பல்லவி
                   கவலை வைக்காதே, மகனே, நீ
                   கவலை வைக்காதே.

அனுபல்லவி
                   கவலைவைத்திந்த உலகை - நாடி
                   அபலமான வரனந்தங் - கோடி - கவலை

சரணங்கள்
1.         பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க்
            குற்ற செல்வம் நமக்குண்டு,
            உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய
            உனக்கென்ன குறையுண்டு? - கவலை

2.         என்ன நான் புசிப்பேனின்று-நாளை
            என்ன நான் குடிப்பேனென்று
            இன்னும் வீண்கவலைகொண்டு-தினம்
            ஏங்கிறாய் எப்பலனுண்டு? - கவலை

3.         காகங்களை நோக்கிப்பாரு-நல்ல
            களஞ்சியமுண்டோ? வேறு
            தாகம் பசிக்கவைக்காரு-இரை
            தருகிறாரென்று கூறு. - கவலை

4.         புல்லும் பூண்டும் காட்டில் வளரும்-பிழைப்
            பூட்டுவ ராரென்று கழறும்,
            பொல்லாக் கவலையாற்றழலும்-மனம்
            பொறுமையில்லாமல் அலறும். - கவலை

5.         உடையின் கவலையாலே-மனம்
            உடையுமே பல வேளை,
            முடியுமோ உந்தனாலே-அல்ல
            முற்றுமது பிதாவேலை. - கவலை

6.         கானகலீலிப் பூப்போலே-கன
            ஞானி சாலமோன் தன் மேலே
            பூணவில்லையாகையாலே-பிதா
            புல்லுக்குடுத்து மாப்போலே. - கவலை

7.         கவலைப்பட்டோர் முழம் கூட்டும்-நரன்
            காசினியிலுண்டோ? காட்டும்
            குவலயமெல்லாம் போற்றும்-இயேசு
            கோமான் திருமொழிகேட்டும். - கவலை

­- ச. முத்துசாமி உபாத்தியாயர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு