நெஞ்சமே தள்ளாடி நொந்து


கிறிஸ்தேசுவே உனக்கு நேச துணையே

236. (260) சஹானா                                       ஆதி தாளம்

பல்லவி
            நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
            நீ கலங்காதே;-கிறிஸ்
            தேசுவே உனக்கு நல்ல
            நேச துணையே.

சரணங்கள்
1.         தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக-உன்னை
            தாக்கியே பகைஞராக நின்றபோதிலும். - நெஞ்சமே

2.         அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய்-உனை
            அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும். - நெஞ்சமே

3.         ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும்,-மா
            சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். - நெஞ்சமே

4.         பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும்,-மிகு
            பாரமாய்ச் சுமை உன் மேலே பற்றி நின்றாலும். - நெஞ்சமே

5.         கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
            கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். - நெஞ்சமே

6.         ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும்,-கிறிஸ்
            தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் - நெஞ்சமே

- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு