நீதியாமோ நீ சொல்லும் ஓய்


ஆதுலர்க்கீவதே பாக்கியம்

274. (298) பியாகு                                          ஆதி தாளம்

பல்லவி

          நீதியாமோ? நீ சொல்லும்,-ஓய்!
          நெறியுளோரே, அறம் செய்யாதிருந்திடில். - நீதி

சரணங்கள்

1.         ஆதுலர்க்[1] கீவதே பாக்கியம்;-பிறரை
            ஆதரித்திடுவதே யோக்கியம்;-ஓகோ!
            பாதகம் செய்யில் நிர்பாக்கியம்;-மோட்ச
            பாதை நடக்கில் சிலாக்கியம். - நீதி

2.         தரித்திரர்க் கிரங்குவோன் உடனே-இடுவான்
            தற்பரனுக் கவன் கடனே,-என்று
            கருத்துடன் சுருதியில் திடனே-உரைத்தார்
            கடுநெஞ் சகல் மானிடனே. - நீதி

3.         அன்புடன் விதவையும் போட்ட-காசை
            அதி வியப்பாய் யேசு காட்டப்,-புகழ்
            இன்புடன் அவள் மிசை சூட்ட,-அதை
            எவர்களும் அகத்தினில் நாட்ட. - நீதி

4.         பிறர் புகழும்படி இன்றே-செய்தால்,
            பிரயோசனமில்லை என்றே,-பரன்
            மறையதில் விளம்பினார் நன்றே;-அம்
            மாதிரி விலகாது நின்றே. - நீதி

5.         பரிதானம் வாங்குதல் தீது;-அதைப்
            பறித்தறம் செய்தல் தகாது;-உமக்
            குரியதில் ஈவது போதம்,-இதில்
            ஊன்றி இருப்பதே நீதம். - நீதி

6.         ஏழைகளுக் கீயாது ஆஸ்தி-ஐயே!
            ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி-இதோ?
            வாழுல கடைந்திடில் நேர்த்தி;-என்றும்
            வாழலாம், அதுவே மா பூர்த்தி. - நீதி
- ச. யோசேப்பு


[1] வறியவர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு