தருணம் இதுவே கிருபை கூரும்


தருணம் இதுவே

295. (6) மோகனம்                                           சாபுதாளம்

பல்லவி

                   தருணம் இதுவே, கிருபை கூரும்,
                   விழிபாரும், பதம் தாரும், தாரும்.

சரணங்கள்

1.         கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;
            அருமை ரட்சக யேசு நாதா,-உல
            கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்
            அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர
            சாதா, நீதா![1] - தருணம்

2.         வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
            மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி
            மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன
            விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந்
            நூலா, சீலா! - தருணம்

3.         அற்ப உலக வாழ்வில் அலைந்து, நிலை குலைந்து,
            அலகைப்படு குழியில் வீழ்ந்து,-தாழ்ந்து,
            அஞ்சி அஞ்சி நலிந் தேனே;-அடிமைக்
            கஞ்சல் என்றுசொல்லும் கோனே,-சீ
            மானே, தானே! - தருணம்

4.         இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
            சொந்தக் கிருபைகள் மா காத்ரம்,[2]-அவை
            சிந்தித்து மடியாவிச் சேத்ரம்,[3]-நிர்ப்
            பந்த அடியர்கள் எம் மாத்ரம்!-பத        
            தோத்ரம்! தோத்ரம்! - தருணம்

- வே. சாஸ்திரியார்


[1] நீதி உடையவனே
[2] முக்கியம்
[3] அதிசயம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு