பரத்திலே நன்மை வருகுமே


பரத்திலே நன்மை வருகுமே

280. (346) துஜாவந்தி                    ஆதிதாளம்

பல்லவி
               பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய
               பாக்கியம் மிகப் பெருகுமே.

அனுபல்லவி
                        பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச்
                        சிரத்திலே அணிய, யேசு
                        தேவனைப் பணிந்து போற்றுவோம். - பரத்

சரணங்கள்

1.         வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும்
            மனத்துயர், இரவு சாபம் இல்லை;
            அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும்
            அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை;
            சருவ மகிமை யுடைய தந்தை
            பரனொடு கிறிஸ்தின் திரு
            அருள் மிகச் சிறந்த ஒளி
            தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே - பரத்

2.         ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து,-வஸ்திரங்கள் தமை
            அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து,
            வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து,-கண்ணீர் அறவே
            மகிமையின் கரத்தினால் துடைத்து,
            கூட்டி ஜீவ புனலிடத்தில்
            கொண்டு மேய்த் தருள் முடியைச்
            சூட்டியே அனந்த பாக்கிய
            சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார். - பரத்

3.         பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்;-பேர் ஒளி துலங்கும்
            பரம கிருபாசனத்தைச் சூழலாம்;
            சங்கை யோ டரசிருந்தே ஆளலாம்;-பராபரன் தன்
            சமூக ப்ரபைதனிலே வாழலாம்;
            மங்கை சீயோன் மகளின் பிரிய
            மன்னவன் தேவாட்டுக் குட்டியின்
            இங்கிதக் கல்யாணப் பந்தியின்
            இருந்து நித்ய விருந்தால் மகிழலாம். - பரத்

- மரியான் உபதேசியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு