ஆண்டவரின் நாமமதை ஈண்டு


ஆண்டவரின் நாமம் ஈண்டு போற்றுவேன்

256. (267) சஹானா                                        ஆதிதாளம்

கண்ணிகள்

1.       ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன்;-அவர்
          ஆளுகையின் நீதி அன்பின் வாழி[1] சாற்றுவேன். - ஆண்

2.         உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன்;-மன
            உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன். - ஆண்

3.         கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை-மதி
            கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை. - ஆண்

4.         வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன்;-பொல்லா
            மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன். - ஆண்

5.         மற்றவனை ஏசி வாயால் குற்றங்கள் செய்யும்-துஷ்ட
            மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும். - ஆண்

6.         பொய்யர்களை என்னுடனே உய்ய ஒட்டேனே;-மகா
            புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே. - ஆண்

7.         சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே;-நல்ல
            சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே. - ஆண்

- த. யோசேப்பு


[1] புகழ்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு