20 April 2019

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற

கி.கீ:289

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆலயம் போய்த் தொழ வாரும்

 

289. ஆனந்தபைரவி                                       ஆதிதாளம்

 

                             பல்லவி

 

                        ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி

                        ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்,

 

                             அனுபல்லவி

 

            ஆலயந்தொழுவது சாலவும்[1] நன்றென

            ஆன்றோருரை[2] நெறி சான்ற வர்க்கானதே,

            ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் - ஆலயம்

 

                             சரணங்கள்

 

1.         பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்

            பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்;

            முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை

            முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு[3]

            மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்

                        மாட்சி காணவே. - ஆலயம்

 

2.         பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந்[4] தொழுதார்

            புனித சுதனும் நமக்கினு முன் மாதிரி தந்தார்;

            ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்;

            ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்;

            ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி. - ஆலயம்

 

3.         தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று;

            சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று;

            இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து

            இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து

            எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில் ஒன்றவே திரு. - ஆலயம்

 

 

- ஜி.சே. வேதநாயகம்



[1] மிகவும்

[2] ஞானிகள் உரைத்த வழி

[3] சொல்லி

[4] போந்த=வந்து

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...