பாவப்பாரில் உன்னத சமாதானம்


பாவப்பாரில் உன்னத சமாதானம்

203. (241) மோகனம்                          சாபு தாளம்

பல்லவி
                   பாவப்பாரில் உன்னத-சமாதானம்;
                   தேவ வாக்கிதுவல்லோ?

சரணங்கள்

1.         பாவீ, உன்தனுக் கிந்த ஓவிய வாக்கை யீந்த
            பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். - பாவப்

2.         கடுத்தவேலை கூடவே, வருத்தந்தொல்லை நீடவே,
            கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். - பாவப்

3.         உறவர், நம் முற்றநேசர் புறமொதுங்கினும் யேசு
            உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார். - பாவப்

4.         வருங்காலான வைகளும் மரணகாலவிருளும்
            அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் - பாவப்

5.         பரமானந்தமே ஓங்கும், தரணித்துன்பமும் நீங்கும்,
            பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம். - பாவப்

- ஜா.ச. சாண்ட்லர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு