உதவி செய்தருளே ஒருவர்க்கொருவர் யாம்


உதவி செய்தருளே

265. காம்போதி                                                       சாபுதாளம் 
பல்லவி 
                   உதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம்
                   உதவி செய்திடவே.

அனுபல்லவி
            உதவி செய்தருள் மோட்ச
            உசிதக் கோனே! நீ பூவில்
            பதவி தந்திட வந்த போதினில்
            பலருக்குதவின பான்மை போலவே. - உதவி

சரணங்கள்
1.         ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்க
            ஒத்தாசை தருவாய்!
            தருண நேச சகாயம் சகலர்க்கும் புரிய
            சகோதரன் படும் கஷ்டங் கவலையில்
            சன்மனத்தொடு பங்கு பெற்றிட. - உதவி

2.         உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்
            ஒன்றாய்ப் பொருந்தவே,
            எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட,
            எந்தையே! உனையருகி நெருங்கிட,
            உன்தயை செயல் தந்து மேற்பட. - உதவி

3.         பிரியாமல் உனையே-பற்ற எமக்குப்
            பெலன் தா! நீ துணையே!
            நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை
            நினது சீடர்கள் பெறவே கிருபைசெய்!
            நிதமு மதிலே மிக வுய்திடவே - உதவி

4.         மாசற்ற பளிங்காய்-ஒளிருமுன்
            மாணன்பு மிகவாய்,
            ஆசற்ற குணமனி கோர்க்கும் பொற் சரடதே!
            அழிவிலாததை எமக்குள் அணிந்திட,
            ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட. - உதவி

- வே. மாசிலாமணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு