திருமா மறையே அருள்பதியே


திருச்சபை வளரத் தயைபுரியே

285. ஆனந்தபைரவி                                                ஆதிதாளம்

பல்லவி

                   திருமா மறையே-அருள்பதியே! நின்
                   திருச்சபை வளர நின்தயை புரியே.

சரணங்கள்

1.         கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,
            கனகார்[1] புவிநின்றே அகல,
            மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, - திருமா

2.         யேசு நாமமெங் கணுமொளி வீச,
            இறையே நினை மெய் விசுவாச
            நேச மோடேயுனின் தாசர்கள் பேச. - திருமா

3.         ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,
            நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,
            சீலமதாயுனின் வசனமதுரைக்க. - திருமா

4.         ஆறிரண்டு பேரான வருடனே
            அமலா இருந்தாய் வெகுதிடனே,
            போரற அருளிய நேயமே போலே. - திருமா

5.         நின்னையன்றிக் கட்டிட எமக்காகா,
            நேயா, தூயா நினை வாகா,
            உன்னி உழைத்திடப் பலமளி யேகா. - திருமா

6.         சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க,
            தமியோர் நின் புகழே உரைக்க,
            நித்திய பாக்கியமே புவிக் களிக்க. - திருமா

- ஞா. சாமுவேல்


[1] பொன் நிறைந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு