திரும்பிப் பாராதே சோதோமைத்


திரும்பிப் பாராதே

260. (336) உசேனி                                         ரூபகதாளம்

பல்லவி

                        திரும்பிப் பாராதே,-சோதோமைத்
                        திரும்பிப் பாராதே.

அனுபல்லவி

            விரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு
            வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு. - திரு

சரணங்கள்
1.         சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-மாதர்
            சந்தடி செய்யும் சீராட்டு,
            விந்தையான போரோட்டு,-மந்தை
            வேடிக்கை என்று விட்டோட்டு. - திரு

2.         செல்வத்திலே மெத்தச் செருக்கு;-நீ
            செய்வதெல்லாம் முழுத்-திருக்கு,
            பல் வழி நீரோட்டப் பெருக்கு;-ஏன்
            பண்ணுகிறாய் இந்த முறுக்கு? - திரு

3.         அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய்;-உல
            காசையினால் மெத்த தியங்கிறாய்;
            சங்கடத்துள்பட்டு மயங்கிறாய்,-வீண்
            சண்டாளரோடு ஏன் முயங்கிறாய்? - திரு

4.         ஆண்டவர் யேசு சகாயமே,-உனக்
            கடைக்கலம் ஐந்து காயம்;
            வேண்டிக் கொள்வது நேயம்;-கை
            விடாதே இந்த உபாயம். - திரு

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு