இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்


இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளும்

300. (290) பிலஹரி                                        ரூபகதாளம்

பல்லவி

          இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே.

அனுபல்லவி

            உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த

சரணங்கள்

1.         பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று
            உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. - இந்த

2.         பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
            சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. - இந்த

3.         உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
            உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. - இந்த

4.         உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
            நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! - இந்த

5.         விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
            பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. - இந்த

- பாக்கியநாதன் தாவீது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு