06 May 2019

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்


பாலர் நேசனே

301. (108) மோகனம்                                           ஏகதாளம்

பல்லவி
            பாலர் நேசனே,-மிகப்-பரிவுகூர்ந்திந்தப்
            பாலரை யேந்தி-ஆசீர்-வதியும், யேசுவே;

சரணங்கள்

1.         பாலர் வந்திடத்-தடை-பண்ணொணாதென்றீர்;
            சாலவந்தருள்-தந்து-தலைமேற் கைவைப்பீர். - பாலர்

2.         வான ராச்சியம்-இவர்-வசத்த தென்றீரே;
            ஞானஸ்நானத்தால்-உந்தம்-நாமஞ்சூட்டுவீர். - பாலர்

3.         கானம் பாடியே-பாலர்,-கர்த்தரே உமைத்
            தானே, ஓசன்னா!-எனச்-சத்தமிட்டாரே. - பாலர்

4.         தேவ பாலனே,-நீருஞ்-சிறிய பிள்ளையாய்
            மேவினீ ரதால்-உமை-வேண்டினோ மையா - பாலர்

5.         ஆவியா லிவர்-ஞான-அபிஷேகம் பெற,
            ஜீவ நேசரே,-அருள்-சிறியர்க் கீவீரே - பாலர்

6.         தாசர் நாங்கள் செய்-வாக்குத்-தத்தம் மீறாமல்,
            நேச யேசுவே,-யெமை-நிலைநிறுத்துவீர். - பாலர்

- யாழ்ப்பாணம் எரேமியா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...