ஒப்பில்லாத ஸ்நேகத்தால்


133.   Loved with ever lasting Love           (256)

1.         ஒப்பில்லாத ஸ்நேகத்தால்
            என்னை நேசித்தே வந்தார்;
            ஆவியின் பேரொளியால்
            இதைத் தெளிவாக்கினார்;
            சமாதானம் நிறைவாய்
            வெள்ளம்போலத் தந்தனர்;
            பிரியாச் சம்பந்தமாய்
            என்னைச் சேர்த்துக்கொண்டனர்.

பல்லவி

                        பிரியாச் சம்பந்தமாய்
                        என்னைச் சேர்த்துக்கொண்டனர்,

2.         திவ்ய சுக வாரியில்
            இன்பமாக மூழ்குவேன்.
            நீலாகாயம், புவியில்
            நவக்காட்சி காண்கிறேன்.
            நித்தம் களிகூறுவேன்
            யேசுவில் ஆனந்தமாய்
            அவர் அன்பில் நிலைப்பேன்
            பிரியாச் சம்பந்தமாய்.

பல்லவி

                        அவர் அன்பில் நிலைப்பேன்
                        பிரியாச் சம்பந்தமாய்

3.         க்லேசம், துன்பம், திகிலால்,
            இனி மேல் நான் கலங்கேன்
            இழுப்புண்டு யேசுவால்,
            திவ்ய மார்பில் சாய்கிறேன்.
            தம்மோடென்றும் சுகமாய்த்
            தங்க அருள் புரிவார்
            பிரியாச் சம்பந்தமாய்
            என்னை சேர்த்து அணைத்தார்

பல்லவி

                   பிரியாச் சம்பந்தமாய்
                        என்னைச் சேர்த்து அணைத்தார்.

4.         பிரியாத வண்ணமாய்
            அவர் சொந்தமாயினேன்.
            இளைப்பாறி இன்பமாய்,
            பரவசம் அடைந்தேன்.
            வானம் பூமி நீங்கினும்,
            மீட்பர் என்னைக் கைவிடார்
            ஸ்திரமாய், எக்காலமும்
            என்னைப் பாதுகாக்கிறார்.

பல்லவி

                        ஸ்திரமாய் எக்காலமும்,
                        என்னைப் பாதுகாக்கிறார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு