பரலோக தந்தாய் நின்னாமம்


30.

கரகரபிரியை         ஆண்டவர் பிரார்த்தனை           ஆதிதாளம்

1.         பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி
            பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்
            வரவே, நினது திருவுளச் சித்தமே
            பரமதில் போலிங்கும் துலங்கிடவே.

2.         அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம்
            அயலார் செய்பிழை பொறுப்பதுபோல்,
            இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே
            நன்றருள்வாய் நரபரிபாலா!

3.         சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு
            தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்;
            நீதா, ராஜ்யம் வல்லப மகிமை
            நினைக்கே யுரிய எக்காலமுமே!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு