அருள் நாதா நம்பி வந்தேன்


123.   I am trusting Thee - Lord Jesus.                (138)

1.         அருள் நாதா! நம்பி வந்தேன்
                        நோக்கக் கடவீர்.
            கைம்மாறின்றி என்னை முற்றும்
                        ரக்ஷிப்பீர்.

2.         தஞ்சம்வேண்டி, நம்பி வந்தேன்
                        திருப்பாதத்தில்,
            பாவ மன்னிப்பருள்வீர் இந்
                        நேரத்தில்.

3.         தூய்மை வேண்டி, நம்பி வந்தேன்
                        உம்தன் ஆவியால்
            சுத்தி செய்வீர் மாசில்லாத
                        ரத்தத்தால்.

4.         துணைவேண்டி நம்பி வந்தேன்
                        பாதை காட்டுவீர்,
            த்ருப்திசெய்து நித்தம் நன்மை
                        நல்குவீர்.

5.         சக்திவேண்டி நம்பி வந்தேன்,
                        ஞான பெலனும்;
            அக்னி நாவும் வல்ல வாக்கும்
                        ஈந்திடும்.

6.         யேசுநாதா! நம்பி வந்தேன்,
                        தவறாமலே
            என்னை என்றும் தாங்கி நின்று
                        காருமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு