18 May 2019

கைதாங்கி வாரும் ஏழை அடியேனை


128.   Hold thou my hand.                  (350)

1.         கைதாங்கி வாரும்! ஏழை அடியேனை
                      உம்மாலேயன்றி நிற்கவேமாட்டேன்;
            கைதாங்கி வாரும்! எந்தன் நேசநாதா!
                        எத்தீங்குக்கும் அப்போது அஞ்சிடேன்.

2.         கைதாங்கி வாரும்! அருள் அவதாரி!
                        மார்போடு அணைத்தன்பு காட்டுவீர்;
            கைதாங்கி வாரும்! பாதை தவறாமல்,
                        காலூன்றி நிற்கத் திடன் செய்குவீர்.

3.         கைதாங்கி வாரும்! அருள் ஜோதியின்றி
                        நான் போகும் பாதை முற்றும் மறையும்;
            என்பேரில் திருமுகத்தின் பிரகாசம்
                        ஏறெடுப்பீர், பேரொளி உதிக்கும்.

4.         கைதாங்கி வாரும்! பூமி இருள் நீங்கி,
                        பேரின்ப ஜோதி வீச, அடியேன்
            இன்னும் உம்மால் கைதாங்கப்பெற்று, நேசா!
                        விண் வீட்டில் ஏறி வாழ்வையடைவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...