கைதாங்கி வாரும் ஏழை அடியேனை


128.   Hold thou my hand.                  (350)

1.         கைதாங்கி வாரும்! ஏழை அடியேனை
                      உம்மாலேயன்றி நிற்கவேமாட்டேன்;
            கைதாங்கி வாரும்! எந்தன் நேசநாதா!
                        எத்தீங்குக்கும் அப்போது அஞ்சிடேன்.

2.         கைதாங்கி வாரும்! அருள் அவதாரி!
                        மார்போடு அணைத்தன்பு காட்டுவீர்;
            கைதாங்கி வாரும்! பாதை தவறாமல்,
                        காலூன்றி நிற்கத் திடன் செய்குவீர்.

3.         கைதாங்கி வாரும்! அருள் ஜோதியின்றி
                        நான் போகும் பாதை முற்றும் மறையும்;
            என்பேரில் திருமுகத்தின் பிரகாசம்
                        ஏறெடுப்பீர், பேரொளி உதிக்கும்.

4.         கைதாங்கி வாரும்! பூமி இருள் நீங்கி,
                        பேரின்ப ஜோதி வீச, அடியேன்
            இன்னும் உம்மால் கைதாங்கப்பெற்று, நேசா!
                        விண் வீட்டில் ஏறி வாழ்வையடைவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு