இயேசுநாதர் உள்ளம் திவ்ய


155.   In the heart of Jesus.              (516)

1.         யேசுநாதர் உள்ளம்
                      திவ்ய அன்பினால்
            உனக்காகப் பொங்கி
                        உருகின்றதால்
            நெஞ்சமே! அவ்வன்பை
                        நம்பித் தேறுவாய்
                                    ஏன் திக்கற்று வீணே
                                    சோர்ந்து போகிறாய்?

2.         யேசுநாதர் எண்ணம்
                        உன்தன் மீதினில்
            நித்தம் நன்மைக்கென்று
                        சென்று போகையில்
            சஞ்சலம் விசாரம்
                        சற்றும் ஆகாதே!
                                    ஏக்கம் துக்கமின்றி
                                    பாது காப்பாரே.

3.         யேசுநாதர் உன்னைத்
                        த்ராட்சத் தோட்டத்தில்
            வேலை செய்ய அன்பாய்
                        ஏவும் காலத்தில்
            இன்னும் சோம்பலாக.
                        நிற்பதென்னவோ?
                                    மோட்சத்தார் பெறாத
                                    வேலை இதல்லோ?

4.         உனக்காக யேசு
                        நாதர் வீட்டிலே
            இன்ப வாசஸ்தானம்
                        க்ரீடமுமுண்டே
            போக்கில்லாதோனாக
                        ஏங்காதிருப்பாய்
                                    மோட்ச பேரானந்தம்
                                    பெற்று வாழுவாய்.       

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு