அன்பர்க்கருள் புரிவோனை


6. (65)                   கல்வாரி மலைதனில் கண்டேன்

தேவகாந்தாரி                                                ரூபகதாளம்
தேவாரம்

1.         அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை,
            துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை,
            பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை,
            இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்;
                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

2.         சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன்,
            பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன்,
            எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன்,
            முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்;
                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

3.         பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன்,
            ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,
            சாவையழித்தமாவீரன், தாரணியோர்க்குபகாரன்,
            தேவ சுரரேத்துந்தீரன், சோதி திருமேனி கண்டேன்;
                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

4.         ஆதியும் அந்தமுமான, அல்பா ஒமேகாவுமான,
            நீதி இரக்கமுமான, நித்திய ஜீவனுமான,
            ஓதிய வேதமுமான, உத்தம மார்க்கமுமான,
            மேதினியிலுருவான மீட்பர் திருமேனி கண்டேன்;
                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

- சா.ப.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு