தேவனே! ப்ரசன்னமாகி


149.   God is here, and that to bless us.               (185)

1.          தேவனே! ப்ரசன்னமாகி
            ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
            ஆசை காட்டும் தாசர் மீதில்
            ஆசீர்வாதம் ஊற்றிடும்

பல்லவி

                   அருள்மாரி எங்கள் பேரில்
                        வருஷிக்கப் பண்ணுவீர்,
                        ஆசையோடு நிற்கிறோமே;
                        ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2.         தேவரீரின் பாதத்தண்டை
            ஆவலோடே கூடினோம்;
            உந்தன் திவ்ய அபிஷேகம்
            நம்பி நாடி அண்டினோம்.

3.         ஆண்டவா! மெய்ப்பக்தர் செய்யும்;
            வேண்டுகோளைக் கேட்கிறீர்;
            அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
            இன்று மூட்டி நிற்கிறீர்.

4.         தாசர் தேடும் அபிஷேகம்
            யேசுவே! கடாட்சியும்;
            பெந்தேகோஸ்தின் திவ்ய ஈவை
            தந்து ஆசீர்வதியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு