அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை


22. (50T)     ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே

சங்கராபரணம்.                 98-ம் சங்கீதம்                  ஆதிதாளம்

பல்லவி
          அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை
          ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே.

அனுபல்லவி
            இரக்கம் கிருபை சத்தியம் விளங்க
            இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். - அதி

சரணங்கள்
1.         நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி
            நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்
            பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்
            புரிந்தனை நின் அருள் பூரணமாக; - அதி

2.         பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்
            பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,
            கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்
            கிருபாகரனைப் போற்றிடுவீரே. - அதி

3.         ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்
            ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.
            ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி
            நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். - அதி

4.         பரமபிதாவே பரிசுத்த தேவா,
            பாரினில் உதித்த தேவ குமாரா,
            ஆவியாய் எங்கும் நிறைந்து விளங்கும்
            ஆரண திரித்துவா, துதி உமக்கே. - அதி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு