திவ்ய ஐக்கியத்தில்


148.   When we walk with the Lord.  (99)

1.        திவ்ய ஐக்கியத்தில்
                        நிலைப்போமேயாகில்,
            அருள் ஜோதியில் நடப்போம்;
                        வல்ல ஆவியினால்
                                    தேவசித்தஞ் செய்தால்,
                                    பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்.

பல்லவி

                        கீழ்ப்படிவோம்.
                        தேவசிந்தஞ் செய்வோம்!
                        திருவாக்கை எப்போதும்
                        நம்பிக் கீழ்ப்படிவோம்.

2.         மேகம் தோன்றுமானால்
                        அன்பின் சூரியனால்
            அது நில்லாமல் மறைந்துபோம்;
                        சோர்பு சந்தேகமும்
                                    அவநம்பிக்கையும்
                                    அணுகாமலே, முன் செல்வோம்.

3.         எந்த வேலையிலும்,
                        இன்ப துன்பத்திலும்,
            அருள்நாதர் சகாயஞ் செய்வார்;
                        வரும் சோதனையோ,
                                    மனோ சஞ்சலமோ,
                                    இவை நீக்கியே பாதுகாப்பார்.

4.         நம்பிக் கீழ்ப்படிந்தே
                        திருப்பாதத்திலே
            நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்;
                        பெரு நன்மை ஈவார்
                                    அபிஷேகஞ் செய்வார்
                                    தேவ ஆவியைப் பெற்றுக்கொள்வோம்.

5.         கர்த்தரோ டின்பமாய்,
                        அந்நியோந்தியமாய்,
            நீங்காமலே வாசஞ் செய்வோம்,
                        அவர் சொற்படியே
                                    உண்மையோடுடனே
                                    மனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு