பின்செல்வேன் என் மீட்பரே


12. (199 S)   பின்செல்வேன் என் மீட்பரே

பைரவி                                                           சாபுதாளம்
பல்லவி 
            பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப்
            பின்செல்வேன், என் மீட்பரே

அனுபல்லவி
            நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர,
            நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், - பின்

சரணங்கள்
1.         என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு
            என்றும் நின்னையே அடுத்தேன்;
            நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான்
            நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, - பின்

2.         சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே
            சீறி மிக வெதிர்த்தே;
            கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
            கடியின் மேல் ஜெயம் பெற்று, அடியேன் நின்னருள் பெற்று, - பின்

3.         நெருக்கம் செய்தால் மனுஷர்-அதென்னையுன்
            நெஞ்சண்டை ஒட்டுவதால்;
            பாரிடத்தில் பல சோதனை வதைத்தாலும்,
            பார்த்திபனே; உன்னை ஒருபோதுமே விடேன், - பின்

4.         காசினி யோர்கள் என்னைப்-பகைத்தாலும்
            காதலன் ஏசு உன்னைப்
            பாசமதாகவே பணிந்து தொழுவேனே;
            பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே. - பின்

- பி. ஜோ. சி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு