ஏசுநாதனே இரங்கும் என் ஏசு நாதனே


10. (221C)   ஏசுநாதனே, இரங்கும்

உசேனி                                                                   ரூபகதாளம்
பல்லவி
                   ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே

அனுபல்லவி
            ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே,
            ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்;
            ஐயா, நேயா, தூயா, ரட்சியும்;
            ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். - ஏசு

சரணங்கள்
1.         அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா?
            ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா,
            தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா,
            தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே,
            தாதா! நாதா! நீ தா! நீ கா!
            தருமப் பிரகாசனே, பரம சருவேசனே. - ஏசு

2.         ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந்தாவே,
            ஆதாமின் பாவத்தால் மானிடன் ஆன மெய் வாழ்வே,
            விந்தைக் கிருபை அளிக்க வேண்டும்; விமலா, நிமலா, அமலா,
            வேறு பண்ணாதே,-மிகும் சீறு-மாறு நண்ணாதே;
            மேலா, கோலா, நூலா, நீயே
            விரும்பிச் சேரும், கோவே; திரும்பிப் பாரும், தேவே. - ஏசு

- வே. சா


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு